Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எஸ்.பி.பி ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய இளையராஜா

எஸ்.பி.பி ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய இளையராஜா
, சனி, 26 செப்டம்பர் 2020 (22:34 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது.   

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் கொரோனா சரியான பின்னரும் நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததை எண்ணி அனைவரும் மிகுந்த வேதனை அடைந்துவிட்டனர்.  

இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பாடகர் மனோ, இயக்குனர் பாரதிராஜா, நடிகர் விஜய் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் எஸ்.பிபியின் நீண்டகால நண்பரும் இசையமைப்பாளருமான இளையராஜா தனது  நண்பர் எஸ்பிபியின் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏந்தி வழிபட்டுள்ளார்.

கடந்த  சில வருடங்களுக்கு முன்  எஸ்பிபி – இளையராஜா இடையே  கருத்துவேறுபாடு நிலவிய போதும் தங்களின் நட்பை அவர்கள் எவ்வளவு தூரம் மதிகிறார்கள் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தப் படத்தில் நடிப்பது சமந்தாவா??? அடுத்த படத்தின் அப்டேட் பார்த்து ரசிகர்கள் ஆர்வம் !