Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’எஸ்.பி.பி.சார் ஒரு பாடல் பாடினாலே’’.... டி. இமான் ஓபன் டாக்

Advertiesment
Composer Open Talk
, திங்கள், 4 அக்டோபர் 2021 (21:13 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் முதல் சிங்கில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இசையமைப்பாளர் இப்பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

கலாநிதிமாறனின் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினி நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள  ’அண்ணாத்த’ பட ஃபர்ஸ்ட் சிங்கிலை வெளியிட்டுள்ளது.  

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த், 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

இப்பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளதாவது: அண்ணாத்த படத்தின் ஓபனிங் பாடலை எஸ்.பி.பி சார் குரலில் பதிவு செய்யும்போதே அருமையாக இருந்தது.  சூப்பர் ஸ்டார் ரஜினிசாரின் படத்தில் அறிமுகப் பாடலுக்கு தனித்துவம் உண்டு என்பதால் இப்பாடலையும் எஸ்.பி.பி,சார் அண்ணாத்த படம் நேர்மறையாக மாறும் என்று உணர்ந்தோம் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’டாக்டர்’ படத்தின் கிளிம்ப்ஸ் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!