Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னால் அந்த மாதிரி படத்தில் நடிக்க முடியாது: கறார் காட்டும் டிடி

என்னால் அந்த மாதிரி படத்தில் நடிக்க முடியாது: கறார் காட்டும் டிடி
, திங்கள், 24 ஏப்ரல் 2017 (22:10 IST)
சின்னத்திரை புகழ் டிடி என்ற திவ்யதர்ஷினி ஏற்கனவே ஒருசில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்திருந்தாலும், 'பவர் பாண்டி' என்ற ஒரே படம் அவரை எங்கேயோ தூக்கிக்கொண்டு சென்றுவிட்டது. அம்மா ரேவதியின் முன்னாள் காதலர்தான் ராஜ்கிரண் என்பதை அறிந்து 'வயதான காலத்தில் ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வது ஒன்றும் தவறில்லை' என்று கேசுவலாக வசனம் பேசி நடித்த டிடியின் நடிப்பை பாராட்டாத பத்திரிகைகளே இல்லை.



 


இந்த நிலையில் 'பவர்பாண்டி' படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆனால் பெரும்பாலான கேரக்டர்கள் அவருக்கு ஒத்துவராத கேரக்டர்களாம். படத்தின்  என்னை உயர்த்தி காட்டக்கூடிய ரோலாக இருந்தால் மட்டுமே நான் நடிப்பேன். ஆனால் அப்படி இல்லை என்றால் கோடி கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியாது' என்று கறாராக கூறி வருகிறாராம்.

எனக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது. எனக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்களும் ஏராளாம். எனவே எனக்கு பொருத்தமான வேடங்கள் இருந்தால் நான் கண்டிப்பாக நடிப்பை தொடர்வேன். இல்லையெனில் எனக்கு சின்னத்திரை போதும்' என்று கூறுகிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனின் இரண்டாவது குருநாதருக்கும் தாதா சாகேப் பால்கே விருது