Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“நான் தான் முதலில் காதலை சொன்னேன்..” கௌதம் கார்த்திக் பகிர்ந்த சீக்ரெட்!

“நான் தான் முதலில் காதலை சொன்னேன்..”  கௌதம் கார்த்திக் பகிர்ந்த சீக்ரெட்!
, வியாழன், 24 நவம்பர் 2022 (08:55 IST)
தமிழ் சினிமாவில் இளம்  நடிகர் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்த  நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் சமீபத்தில் இருவருமே அந்த தகவலை உறுதி செய்தனர்.

இந்நிலையில் அவர்களின் திருமணம் வரும் 28 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் காதலர்கள் ஜோடியாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள். அப்போது பேசிய கௌதம் கார்த்திக் “நான்தான் முதலில் மஞ்சிமாவிடம் காதலை தெரிவித்தேன். அவர் இரண்டு நாட்கள் கழித்து சம்மதம் தெரிவித்தார். திருமணத்தில் குடும்பத்தினர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் படி நடத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பத்து தல படத்தின் முக்கிய அப்டேட்… சிம்பு வுக்கு நன்றி தெரிவித்த படக்குழு!