Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் மாரிமுத்துவின் கடைசி பேட்டி.. தேசிய விருது குறித்த பரபரப்பு கருத்து..!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (11:16 IST)
நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலை காலமான நிலையில் அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் திண்ணையில் சின்னத்திரை உலகினர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் முன்னணி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் தேசிய விருது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
 
கடைசி விவசாயி படத்துக்கு தேசிய விருது கிடைத்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் ஆனால் அதே நேரத்தில் ஜெய்பீம் படத்திற்கு கிடைக்காதது எனக்கு மிகுந்த வருத்தம் என்றும் கூறியுள்ளார். 
 
தேசிய விருது அளிக்கும் விருது குழுவினர் ஜெய்பீம் படத்திற்கு விருது கொடுக்காததற்கு ஏதாவது காரணத்தை கண்டுபிடித்திருப்பார்கள் என்றும் ஆனாலும் அந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய விருதை பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்  
 
தேசிய விருது என்பது ஒரு அங்கீகாரம் தான் என்றும் மக்கள் மத்தியில் ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முக்கியம் என்றும் அவர் கூறினார். இந்த பேட்டி தான் அவர் கொடுத்த கடைசி பேட்டி என்பதால் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments