Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேசிய விருது பெற்ற பின்னர் இளையராஜாவை சந்தித்த ஸ்ரீகாந்த் தேவா!

தேசிய விருது பெற்ற பின்னர் இளையராஜாவை சந்தித்த ஸ்ரீகாந்த் தேவா!
, புதன், 30 ஆகஸ்ட் 2023 (14:18 IST)
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிஸியான இசையமைப்பாளராக இருந்தவர் ஸ்ரீகாந்த் தேவா. ஆனால் இப்போது வாய்ப்புகள் இல்லாததால் தன்னுடைய நிருபிக்கும் விதமாக ஆல்பங்கள் மற்றும் சுயாதீனப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் அவர் இசையமைத்த குறும்படமான கருவறை படத்துக்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீகாந்த் தேவா தமிழ் சினிமாவின் மூத்த இசையமைப்பாளரான இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். முன்னதாக சிறந்த இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்ட தேவி ஸ்ரீ பிரசாத்தும் இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவினுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை… இயக்குனர் இளன் கொடுத்த அப்டேட்!