Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புஷ்பா படத்தில் நடிக்க மறுத்த மகேஷ்பாபு… கைவிட்டுப்போன தேசிய விருது!

புஷ்பா படத்தில் நடிக்க மறுத்த மகேஷ்பாபு… கைவிட்டுப்போன தேசிய விருது!
, ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (07:47 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட 69 ஆவது தேசிய விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருது புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகர் விருதைப் பெறும் முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் அல்லு அர்ஜுன்.

இந்நிலையில் புஷ்பா படத்தில் முதலில் நடிக்க இருந்தது மகேஷ்பாபுதான் என்றும் ஆனால் அவர் அந்த படத்தில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக நடிக்காமல் கைவிட்டதாகவும், ஒருவேளை அவர் நடித்திருந்தால் அவருக்குதான் தேசிய விருது கிடைத்திருக்கும் எனவும் ரசிகர்கள் இப்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை நடிக்கவிடாமல் பூட்டுப்போட்டு சாவியை எடுத்து சென்றுவிட்டார்கள்… வடிவேலு பேச்சு!