Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னணி நடிகர் பெயரில் சமூக வலைதளத்தில் மோசடி...

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (20:46 IST)
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி அதில் ரசிகர்களுக்கு பதில் அளிப்பதுடன், புதுப்படங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அதில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் பிரபல நடிகர்களின் பெயரில் போலியான அக்கவுண்ட்கள் உருவாக்கப்படுவது வாடிக்கையாகி வருவது தலைவலியாக உருவெடுத்துள்ளது.

இப்போலி அக்கவுண்டுகள் தொடங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற விமர்சனங்கள் உண்டு.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் படத்தில் நடிக்க நடிகைகள் தேவைப்படுவதாக ஒரு போலியான அக்கவுண்ட் மூலம்  மெசேஜ்  பல நடிகைகளுக்கு சென்றுள்ளது.

இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால், அந்த மெசேஜ்-ஐப் பகிந்து பல நடிகைகளுக்கு அவர் கூறியுள்ளதாவது: 

எனது பெயரை ஒருவர் தவறான காரணங்களுக்காகப் பயன்படுத்திவருகிறார். எனவே எச்சரிக்கையாக இருங்கள். இதுபோல் செயல்படுபவர்களின் வன்மத்தை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மேலும் நான் இப்போது எனது சொந்த பேனரில் தான் நடித்து வருகிறேன். எனவே இந்தப் போலியான மெசேஜ் அனுப்பிய இன்ஸ்டா ஐடி மீது விரையில் புகார் அளிக்கவுள்ளேன். எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் புத்துணர்ச்சி பெறும் சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படம்.. இசையமைப்பாளர் இவரா?

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர், தயாரிப்பாளர் யார்? புதிய தகவல்..!

சினிமாவுக்கு வரும் ஷங்கர் மகன்.. உதயநிதி மகன்.. இயக்குனர்கள் யார் யார்?

நான் விளம்பரம் செய்தது கேமிங் செயலிகளுக்கு மட்டுமே.. அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் விஜய் தேவரகொண்டா பேட்டி..

கருநிற உடையில் கண்குளிர் போட்டோஷூட்டை நடத்திய திவ்யபாரதி!

அடுத்த கட்டுரையில்
Show comments