Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் ஆளாக விருதுபெற்ற இளையராஜா

முதல் ஆளாக விருதுபெற்ற இளையராஜா
, புதன், 21 மார்ச் 2018 (09:27 IST)
பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், முதல் ஆளாக இளையராஜாவுக்கு விருது வழங்கப்பட்டது. 
2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதுகளை வழங்கினார். இந்த  விழாவில், முதல் ஆளாக ‘இசைஞானி’ இளையராஜாவுக்கு விருது வழங்கப்பட்டது. தனக்கு அளிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை அவர் பெற்றுக்  கொண்டார்.
 
தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் பாரிக், நாட்டுப்புற பாடகர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமி, யோகா கலைஞர் நானம்மாள் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
 
இந்த விழாவில் 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 9 பேருக்கு பத்மபூஷண் விருதும், 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யை கலாய்க்கின்றாரா கருணாகரன்?