Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி பட நடிகை மீது எப்ஐஆர் பதிவு செய்த போலீசார்

ரஜினி பட நடிகை மீது எப்ஐஆர் பதிவு செய்த போலீசார்
, திங்கள், 25 பிப்ரவரி 2019 (16:39 IST)
ரஜினியின் லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்கா. பிரபல பாலிவுட் நடிகையான இவர் மீது கலை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.


 
2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதாக சோனாக்ஷி சின்கா வாக்குறுதி அளித்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிறுவனம் பணம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சோனாக்ஷி சின்கா நிகழ்ச்சியில் பங்கேற்காமல் மும்பைக்கு திரும்பி விட்டாராம் . இதனால் தங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறி அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை ஏற்று சோனாக்ஷி சின்கா உள்ளிட்ட 4 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420 மற்றும் 406 ஆகிய பிரிவின்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய நண்பனுடன் ஜூலி வைரலாகும் புகைப்படம்