Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நிர்வாகிகள் - ரஜினிகாந்த்

எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நிர்வாகிகள் - ரஜினிகாந்த்
, திங்கள், 30 நவம்பர் 2020 (23:00 IST)
இன்று காலையில் தனது ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிமக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார் ரஜினிகாந்த். அதன்பின்னர் தற்போது ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர், பெயருக்கு கட்சி ஆரம்பித்து விட்டு தோல்வி அடைய விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் கூறியதாக நிர்வாகிகள் ஊடகங்களுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இன்று காலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் கட்சி தொடங்குவது, வெற்றி வாய்ப்பு குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் ஆலோசனை செய்ததாகவும் இதனை அடுத்து விரைவில் தனது முடிவை அறிவிப்பதாக கூறியதாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது பெயருக்கு கட்சி தொடங்கி 10 முதல் 15 சதவீத வாக்குகளை வாங்கி தோல்வி அடைய விரும்பவில்லை என ரஜினிகாந்த் நிர்வாகிகளிடம் கூறியதாக தெரிவித்தார்

தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் நிர்வாகிகளிடையே கூறியதாகவும் அவர் தெரிவித்தார். எனவே நமக்கு வெற்றி வாய்ப்பு உண்மையாகவே உள்ளது என்பது தெரிந்தால் மட்டுமே அரசியல் கட்சியை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நடிகர் தற்போது ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தற்போது ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்‌ஷராவின் அந்தரங்க புகைப்படங்கள் விவகாரம்….முன்னாள் காதலர் விளக்கம் !