Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“ஒவ்வொரு படமும் முதல் படம்தான்” – சஞ்சிதா ஷெட்டி

Advertiesment
தமிழ் சினிமா
, புதன், 21 பிப்ரவரி 2018 (14:31 IST)
‘என்னுடைய ஒவ்வொரு படமும் எனக்கு முதல் படம்தான்’ என சஞ்சிதா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’. அஸார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரெஹானா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளதோடு, இணை தயாரிப்பாளராகவும் உள்ளார்.
 
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சஞ்சிதா ஷெட்டி, “ஒவ்வொரு படத்தையும் முதல் படமாகத்தான் நினைத்து நடித்து வருகிறேன். அஸார் ரொம்ப திறமையான நடிகர். ரெஹானா இசையில் வச்சி செய்றேன், அம்மா பாடல் என இரண்டு பாடல்கள் எனக்குப் பிடித்துள்ளன. ஒரு பெண் தயாரிப்பாளரின் படத்தில் நடித்தது புது அனுபவம். இந்த தலைப்பு பலரையும் படத்தைப் பற்றி பேச வைத்துள்ளது” என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆச்சி மனோரமாவின் இல்லத்தில் படம்பிடிக்கப்படும் ‘கடைக்குட்டி சிங்கம்’