அசத்தல்..செம பஞ்ச் விஜய்; சன்.டி.வியே இதை எதிர்பார்த்திருக்காது: கஸ்தூரி டுவீட்

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (14:09 IST)
சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் இப்படி பேசுவார் என சன்.டி.வியே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார்.
விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் தனது அரசியல் பிரவேசத்திகு அடிபோட்டார். இந்த படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை, ஒருவேளை நான் முதல்வரானால், ஊழலை ஒழிக்க முயற்சி செய்வேன், ஆனால் அது முடியுமா? என்று தெரியவில்லை என்று கூறினார். 
 
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, விஜய் பேசியதை முதலில் பார்த்த உடனேயே, அவர் எழுதிக் கொடுத்ததை தான் பேசுகிறார் என நினைத்தேன். பின் அவர் காந்தியைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசும் போதுதான் அவர் ஆழ்மனதிலிருந்து பேசினார் என புரிந்தது. நிகழ்ச்சியை நடத்திய சன்.டி.வியே விஜயின் சரவெடியை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என கஸ்தூரி கூறியிருக்கிறார்.
இதனால் விஜய் ரசிகர்கள் கஸ்தூரியை சமூக வலைதளத்தில் புகழ்ந்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments