மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால் கோவிட் உள்ளிட்ட காரணங்களால் எம்பூரான் திரைப்படத்தின் ஷூட்டிங் நீண்ட நாள் தாமதத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது. இதையடுத்து எம்பூரான் திரைப்படம் மார்ச் மாதம் 28 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு ப்ரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் டிரைலர் வெளியாகி இந்திய அளவில் கவனம் செலுத்தியது. படம் ஜனவரி 27 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் மும்முரமாக ப்ரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன.
படத்துக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில் முதல் வார இறுதிநாட்களுக்கு மட்டும் உலகளவில் சுமார் 58 கோடி ரூபாய் அளவுக்கு டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மலையாளப் படத்துக்கு இதுவரை கிடைத்திராத வரவேற்பு என சொல்லப்படுகிறது. இதனால் எம்புரான் திரைப்படம் வசூலில் சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.