Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முடிந்தது எதற்கும் துணிந்தவன் ஷூட்டிங்! திரையரங்கில் வெளியாகுமா? – ஏக்கத்தில் சூர்யா ரசிகர்கள்!

முடிந்தது எதற்கும் துணிந்தவன் ஷூட்டிங்! திரையரங்கில் வெளியாகுமா? – ஏக்கத்தில் சூர்யா ரசிகர்கள்!
, புதன், 10 நவம்பர் 2021 (15:58 IST)
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாக இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக முன்னதாக சூர்யா நடித்த சூரரை போற்று, ஜெய்பீம் ஆகியவை திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளங்களிலேயே வெளியாகின.

இந்நிலையில் காப்பான் படத்திற்கு பிறகு நீண்ட ஆண்டுகள் கழித்து சூர்யாவின் “எதற்கும் துணிந்தவன்” படம் திரையரங்கில் வெளியாக உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கத கத்தன்னு கவர்ச்சி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!