Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு நிறைவு: விரைவில் சூப்பர் அப்டேட்!

’எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு நிறைவு: விரைவில் சூப்பர் அப்டேட்!
, புதன், 10 நவம்பர் 2021 (13:08 IST)
சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார் 
 
சற்றுமுன் இயக்குனர் பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் சன் பிக்சர்ஸ் நிறுவனம், சூர்யா, ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு மற்றும் அனைவருக்கும் தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் விரைவில் வெளி வர இருப்பதாகவும் பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் நடித்துள்ளனர் என்றும், மேலும் சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ். பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
டி. இமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் வரும் ஜனவரியில் பொங்கல் தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிங்கிள் சட்டையில் பலே போஸ் கொடுத்த பார்வதி நாயர் - கில்மா க்ளிக்ஸ்!