Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேகதாது அணைத்திட்டத்துக்கு ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது… துரைமுருகன்!

மேகதாது அணைத்திட்டத்துக்கு ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது… துரைமுருகன்!
, புதன், 26 மே 2021 (17:21 IST)
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கர்நாடக அரசின் மேகதாது அணைத்திட்டத்துக்கு ஒருபோதும் தமிழக அரசு அனுமதி அளிக்காது எனக் கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் தலைக்காவிரில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நதி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில்  வருடத்திற்கு 177. 25 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டுமென உச்ச நீதிமன்றம்  கர்நாட அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவுப்படி  மாதம் தோறும் திறந்துவிடப்படும் குறிப்பிட்ட அளவு டிஎம்சி தண்ணீர் அளவு உள்ளதா என்றால்,  மழை இருந்தால் தான் தண்ணீர் என கர்நாடக அரசு கூறிவருகிறது.

இந்நிலையில், கர்நாடக அரசு, காவேரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு தெரிவித்து மேகதாதுவில் அணைகட்டுவதை தடுக்க  பலத்த முயற்சிகளை எடுத்து வருகிறது.ஆனால் கர்நாடக அரசு கேட்பதாக இல்லை. இந்நிலையில் நேற்று தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் அணை கட்டுவது குறித்து நிபுணர் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ‘கர்நாடகாவில் அணைகட்ட ஒருபோதும் தமிழக அரசு அனுமதி அளிக்காது’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிஎஸ்பிபி பள்ளியில் நடந்ததுபோல் எனக்கும்...பிரபல நடிகை வேதனை