Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திரிஷ்யம் 3 ஆம் பாகத்துக்கான அப்டேட்டைக் கொடுத்த தயாரிப்பாளர்!

திரிஷ்யம் 3 ஆம் பாகத்துக்கான அப்டேட்டைக் கொடுத்த தயாரிப்பாளர்!
, ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (16:30 IST)
மோகன்லால் ஜீத்து ஜோசப் கூட்டணியின் ஹிட் படமான திரிஷ்யம் 3 ஆம் பாகம் வர உள்ளதாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

அந்த வெற்றியை அடுத்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் கடந்த ஆண்டு வெளியானது. வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப்போது தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என முந்தைய இரண்டு படங்களின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் இதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லைகர் படத்தை விமர்சித்த நடிகையை வறுத்தெடுக்கும் விஜய் தேவர்கொண்டா ரசிகர்கள்!