Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெங்கட்பிரபு – நாக சைதன்யா படத்தின் ஒளிப்பதிவாளர் இவரா? வெளியான தகவல்!

வெங்கட்பிரபு – நாக சைதன்யா படத்தின் ஒளிப்பதிவாளர் இவரா? வெளியான தகவல்!
, செவ்வாய், 31 மே 2022 (09:23 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளது.

மாநாடு வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இதையடுத்து அவர் இயக்கிய அடல்ட் காமெடி படமான மன்மத லீலை ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது.

அதையடுத்து நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை அவர் இயக்க உள்ளார். இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் படத்துக்கு ஒளிப்பதிவாளராக SR கதிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் சுப்ரமண்யபுரம், கற்றது தமிழ் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இரண்டு ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக பணியாற்றி இருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 20’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!