Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனும் வழிக்கு வந்தார்…? ஓடிடியுடன் நடக்கும் பேரம்!

சிவகார்த்திகேயனும் வழிக்கு வந்தார்…? ஓடிடியுடன் நடக்கும் பேரம்!
, புதன், 9 செப்டம்பர் 2020 (16:40 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படமும் ஓடிடியில் ரிலிஸ் ஆக முடிவெடுத்து அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’டாக்டர்’ மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’அயலான்’ என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ’டாக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 15 நாட்கள் மட்டுமே இருப்பதாகவும் விரைவில் அது நடத்தி முடிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை ஓடிடியில் ரிலிஸ் செய்ய ஒரு முன்னணி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. தயாரிப்பு தரப்பு எதிர்பார்க்கும் தொகையை கொடுக்கும் பட்சத்தில் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகரின் பிறந்தநாள் ! குவியும் வாழ்த்துகள்