Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு கிடாயின் கருணை மனு படத்தினை ஏன் இன்னும் தொலைக்காட்சிகளுக்கு விற்கவில்லை – இயக்குனர் கோபம்!

ஒரு கிடாயின் கருணை மனு படத்தினை ஏன் இன்னும் தொலைக்காட்சிகளுக்கு விற்கவில்லை – இயக்குனர் கோபம்!
, புதன், 12 ஆகஸ்ட் 2020 (17:43 IST)
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தினை ஏன் இன்னும் தொலைக்காட்சிகளில் விற்கவில்லை என அப்படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு விதார்த் மற்றும் ரவீனா நடிப்பில் அறிமுக இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு கிடாயின் கருணை மனு எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடித்த 90 சதவீதத்துக்கும் மேலானவர்கள் புதுமுகங்களே. எனினும் எதார்த்தமான திரைக்கதையாலும், நடிகர்களின் சிறப்பான நடிப்பாலும் அந்த திரைப்படம் கவனம் பெற்றது. ஆனாலும் 3 ஆண்டுகளாகியும் அந்த திரைப்படம் இன்னமும் எந்தவொரு தொலைக்காட்சி சேனலிலும் ஒளிபரப்பாகவில்லை.

இதுகுறித்து அப்படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா, தயாரிப்பு நிறுவனமான ஈராஸிடம் ‘ஏன் இன்னும் அந்த படத்தை எந்த வொரு சேனலுக்கும் விற்கவில்லை. உங்களுக்கு வேண்டுமானால் அது சிறிய பட்ஜெட் படமாக இருக்கலாம். ஆனால் அதில் பணியாற்றிய கலைஞர்களின் உழைப்பு விலைமதிப்பற்றது’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொஞ்சம் ஓவரா தான் போறீங்க... ஷிவானிக்கு கண்ணியமான முறையில் அட்வைஸ்!