Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷங்கரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தெலுங்கு தயாரிப்பாளர்! பட்ஜெட் விஷயத்தில் கறார்!

ஷங்கரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தெலுங்கு தயாரிப்பாளர்! பட்ஜெட் விஷயத்தில் கறார்!
, வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (11:00 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்பது அனைவரு அறிந்ததே.

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பட்ஜெட் ஷங்கரின் கடைசி படங்களை விட மிகவும் கம்மியாம். ரூ 170 கோடி ரூபாய் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 மாதங்களுக்குப் பிறகே தொடங்க உள்ளதாம். இடையில் ராம் சரண் தனது ஆர் ஆர் ஆர் படத்தை முடிக்கவும், ஷங்கர் தனது மகளின் திருமணத்தை முடிக்கவும் முன்னுரிமைக் கொடுக்க உள்ளார்களாம். 

வழக்கமாக இயக்குனர் ஷங்கர் தன் படத்தின் பட்ஜெட் என்னவென்று கூட தயாரிப்பாளர்களிடம் சொல்ல மாட்டாராம். இதனால் இஷ்டத்துக்கு பட்ஜெட் எகிறிவிடும். ஆனால் தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு ஷங்கரின் கெடுப்பிடியாக பேசி முதலிலேயே பட்ஜெட் என்ன வென்று கேட்டு வாங்கிவிட்டாராம். மேலும் சொன்ன பட்ஜெட்டுக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்றும் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு படத்தின் கதாநாயகி இவர்தானா? மீண்டும் இணையும் ஹிட் கூட்டணி!