Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 மாதம் கழித்தே ஷூட்டிங்… ஷங்கர் படத்தின் அடுத்த அப்டேட்!

5 மாதம் கழித்தே ஷூட்டிங்… ஷங்கர் படத்தின் அடுத்த அப்டேட்!
, திங்கள், 15 பிப்ரவரி 2021 (10:29 IST)
இயக்குனர் ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 மாதங்களுக்கு பிறகே நடக்க உள்ளதாம்.

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக அறியப்பட்ட ஷங்கர் இப்போது தேய் திசையில் இருக்கிறார். கடைசியாக அவர் இயக்கிய ஐ, 2.0 ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தன. தற்போது அவர் இயக்கி வந்த இந்தியன் 2 திரைப்படமும் நீண்ட காலமாக இழுபறியில் இருந்தது. இதனால் அடுத்த படத்துக்கான வேலைகளில் அவர் இறங்கினார். தமிழில் அவர் சொல்லும் பட்ஜெட்டில் இப்போது படமெடுப்பது ரிஸ்க் என்று பல தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்களாம். அதனால் ஷங்கர் தெலுங்கு சினிமாவுக்கு செல்லும் முடிவில் இறங்கினாராம்.

இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் ஷங்கரின் கடைசி படங்களை விட மிகவும் கம்மியாம். ரூ 170 கோடி ரூபாய் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 மாதங்களுக்குப் பிறகே தொடங்க உள்ளதாம். இடையில் ராம் சரண் தனது ஆர் ஆர் ஆர் படத்தை முடிக்கவும், ஷங்கர் தனது மகளின் திருமணத்தை முடிக்கவும் முன்னுரிமைக் கொடுக்க உள்ளார்களாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2.0 படத்தை 800 கோடிக்காக விற்பதற்காக அரசியல் அறிவிப்பு – ரஜினி மீது ரசிகர் புகார்!