Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யாவுக்கு ஆதரவு தரவில்லை..இயக்குநர் கேள்வி

சூர்யாவுக்கு ஆதரவு தரவில்லை..இயக்குநர் கேள்வி
, செவ்வாய், 6 ஜூலை 2021 (23:28 IST)
நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக யாரும் இல்லையா என்று பிரபல இயக்குநர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட்தேர்வு. புதிய கல்விக் கொள்கை, புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக சூர்யா குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் நீட்தேர்வு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த கரு நாகராஜன் நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவுடன் பொது விவாதம் நடத்த தயார் என்று கூறியுள்ளார்

அதேபோல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகத்தில் மட்டுமே நீட் தேர்வை எதிர்த்து எதிர்த்து வருகின்றனர் என்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் கம்யூனிஸ்டு ஆளும் மாநிலங்களிலும் இந்த எதிர்ப்பு இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

நீட் தேர்வில் தாக்கம் குறித்து ஆராயும் அரசாணைக்கு எதிராக பாஜகவின் வழக்கு சட்டபூர்வமான போராட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அமீர்,  நீட்தேர்வு. புதிய கல்விக் கொள்கை, புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக சூர்யா குரல் கொடுத்துவரும் சூர்யாவிற்கு திரைத்துறையில் யாரும் ஆதரவு தரவில்லை என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் பிரசாந்தின் ‘அந்தகன்’ படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்!