Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாரி செல்வராஜ் & துருவ் விக்ரம் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது? லேட்டஸ்ட் தகவல்!

மாரி செல்வராஜ் & துருவ் விக்ரம் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது? லேட்டஸ்ட் தகவல்!
, செவ்வாய், 7 மார்ச் 2023 (15:40 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் கபடி பயிற்சியெல்லாம் எடுத்தார். ஆனால் இப்போது இந்த படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம். அதற்குக் காரணம் மாரி செல்வராஜ் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலினை இயக்க முடிவு செய்ததுதான். அந்த படத்தை முடித்த மாரி செல்வராஜ் வாழை என்ற தான் தயாரித்து இயக்கும் படத்தைத் தொடங்கினார்.

இதனால் துருவ் விக்ரம் படத்தின் ஷூட்டிங்கை எப்போதுதான் தொடங்குவார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இப்போது அந்த படம் பற்றி லேட்டஸ்ட் தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. ஜுலை மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலா 25 லட்சம் வாங்கிட்டு ஏமாத்திட்டார்.. பிதாமகன் தயாரிப்பாளர் புலம்பல்!