Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த துருவ் விக்ரம்!

தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த துருவ் விக்ரம்!
, வெள்ளி, 1 ஜனவரி 2021 (13:04 IST)
நடிகர் துருவ் விக்ரம் தனது அடுத்த படத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கிய பரியெறும் பெருமாள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து அவர் இப்போது தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அவர் தன் முதல்பட தயாரிப்பாளர் பா ரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரம்மை கதாநாயகனாக ஒரு படம் இயக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

மாரி செல்வராஜ் இந்த கதையை விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கியுள்ளாராம். ஆனால் அது என்ன விளையாட்டு சம்மந்தப்பட்டது என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துருவ் விக்ரம் தனது சமூகவலைதள பக்கத்தில் தனது அடுத்த படத்தில் முன்னணி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்னிந்தியாவைக் கலக்கிய திருஷ்யம் – பார்ட் 2 டீசர் ரிலீஸ்!