Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த ப்ரமோஷனும் இல்லாமல் ரிலீஸ் ஆகும் நானே வருவேன்… திருச்சிற்றம்பலம் மேஜிக் மீண்டும் நடக்குமா?

எந்த ப்ரமோஷனும் இல்லாமல் ரிலீஸ் ஆகும் நானே வருவேன்… திருச்சிற்றம்பலம் மேஜிக் மீண்டும் நடக்குமா?
, வியாழன், 29 செப்டம்பர் 2022 (08:59 IST)
தனுஷின் நானே வருவேன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது. ஆனால் படத்துக்கு பெரிதாக எந்த ப்ரமோஷனும் செய்யப்படவில்லை.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நாளை பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இன்று எந்தவிதமான பெரிய ப்ரமோஷன்களும் இல்லாமல் படம் ரிலீஸ் ஆகிறது. படத்துக்காக தனுஷோ மற்ற படக்குழுவினரோ ஒரே ஒரு நேர்காணல் கூட அளிக்கவில்லை. இதனால் படம் நன்றாக இல்லாததால்தான் ப்ரமோஷன் செய்யாமல் ரிலீஸ் செய்கிறார்கள் என்ற கருத்தும் எழுந்துள்ளது. சமீபத்தில் ரிலீஸான தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படமும் இதுபோல ப்ரமோஷன் இல்லாமல்தான் ரிலீஸாகி வெற்றி பெற்றது. அதே மேஜிக்கை இந்த படமும் செய்யுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் அருண் விஜய்க்கு பதில் வில்லனாக நடிக்கப் போகும் தமிழ் நடிகர்!