Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இத்தனை பேர் ஆசைப்படும் போது வடசென்னை 2 வராமலா போய்விடும்… கேப்டன் மில்லர் நிகழ்வில் தனுஷ் பதில்!

Advertiesment
இத்தனை பேர் ஆசைப்படும் போது வடசென்னை 2 வராமலா போய்விடும்… கேப்டன் மில்லர் நிகழ்வில் தனுஷ் பதில்!
, வியாழன், 4 ஜனவரி 2024 (09:49 IST)
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.  அப்போது பேசிய தனுஷிடம் ரசிகர்கள் வடசென்னை படத்தின் இரண்டாம் எப்போது வரும் எனக் கேட்டனர். பல காலமாகவே வெற்றி மாறனிடமும், தனுஷிடமும் இந்த கேள்வி கேட்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலளித்த தனுஷ் “வடசென்னை 2 கண்டிப்பாக வரும். இத்தனை உள்ளங்கள் வேண்டும் வேண்டும் என்று சொல்லும் போது வராமலா போய்விடும்” எனக் கூறியுள்ளார். ஆனால் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரும் அடுத்த சில வருடங்களுக்கு தங்களின் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு வட சென்னை 2 வராது என்பதே கசப்பான உண்மை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் கேப்டன் மில்லர்!