Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை முதலில் இயக்க இருந்தது இவரா?

தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை முதலில் இயக்க இருந்தது இவரா?
, செவ்வாய், 26 டிசம்பர் 2023 (07:13 IST)
தனுஷ் தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இன்னும் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தனுஷின் இயக்கத்தில் மூன்றாவது உருவாகும் படத்துக்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படம் 7 ஆண்டுகளுக்கு முன்பே தனுஷ் கதை வசனத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருந்தது. அப்போது அந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க இருந்தார். ஆனால் அப்போது சில பல காரணங்களால் இந்த படம் தொடங்காததால் இப்போது தனுஷே அந்த கதையை இயக்க களமிறங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரியங்கா மோகனா இது… கிளாமர் ரோலில் நடித்திருக்கும் ‘டிக்டாக்’ படத்தின் டிரைலர் ரிலீஸ்!