Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குபேரா படத்தின் காட்சிகளில் இயக்குனர் அதிருப்தி… மீண்டும் நடக்கவுள்ள ரி ஷூட்!

குபேரா படத்தின் காட்சிகளில் இயக்குனர் அதிருப்தி… மீண்டும் நடக்கவுள்ள ரி ஷூட்!

vinoth

, புதன், 21 ஆகஸ்ட் 2024 (15:11 IST)
நடிகர் தனுஷ் நடித்த  முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா தற்போது நடித்து வருகிறார். குபேரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் திருப்பதியில் நடந்தன. அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பை தாராவியில் நடந்தது. மொத்த ஷூட்டிங்கும் முடிந்த நிலையில் எடிட் செய்யப்பட்ட படத்தை இயக்குனர் சேகர் சமீபத்தில் பார்த்துள்ளார்.

அதில் சில காட்சிகள் அதிருப்தியளித்ததால் அதை மட்டும் மீண்டும் ஷூட் செய்யவேண்டும் என முடிவெடுத்துள்ளார்களாம். அதை தனுஷிடம் சொல்ல, அவரும் ரி ஷூட்டுக்கு சம்மதித்துள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கலான் வெற்றியை அடுத்து சூர்யாவோடு இணைகிறாரா பா ரஞ்சித்?