Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிகட்ட ஷூட்டுக்காக பாங்காங் பறந்த ‘இட்லி கடை’ படக்குழு!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2025 (07:18 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.  படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார்.

இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் தேனியில் மீண்டும் தொடங்கிய நிலையில், இரண்டு நாட்கள் அங்கு படமாக்கிவிட்டு தற்போது பாங்காங்குக்கு சென்றுள்ளது படக்குழு.

படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கும் சத்யராஜ், பார்த்திபன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் இருந்து பாங்காங் செல்லும் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றி இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த படம் முதலில் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்து தற்போது அக்டோபர் 1 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் கேட்ட சம்பளம்.. அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்?

இந்தியாவுக்கு வருகிறது AI ஸ்டுடியோ.. விஜய் பட தயாரிப்பாளரின் முதல் முயற்சி..!

அந்த கராத்தே பாபுவே நான் தான்.. இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!

முதன்முறையாக சுந்தர் சி உடன் இணையும் கார்த்தி.. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமன்னா..!

ஹோம்லி லுக்கில் ஸ்டன்னிங் ஆல்பத்தை வெளியிட்ட ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments