Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிக்கலில் ‘இட்லி கடை’ ரிலீஸ்!… அந்த தேதியில் துண்டு போடும் சூர்யா 45 படக்குழு!

Advertiesment
Suriya 45

vinoth

, செவ்வாய், 27 மே 2025 (11:14 IST)
கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா, ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். மிகக் குறுகிய கால படமாக உருவாகி வரும் இந்த படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது.

படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். கோயம்புத்தூரில் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது சென்னையில் முக்கியமானக் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர்.

இந்த படத்துக்கு ‘வேட்டைக் கருப்பு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. முதலில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அந்த தேதியில் ரிலீஸாக இருந்த தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தைய அமலாக்கத்துறை சோதனையால் சிக்கலில் உள்ளார். அதனால் இட்லி கடை திரைப்படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணப்பா படத்தின் ஹார்ட் டிஸ்க் மிஸ்ஸிங்கா?... படக்குழுவினர் தேடும் நபர்!