தேவயானி - ராஜகுமாரன் தம்பதியின் மகள் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாகவும், அவருக்கு தியாகராஜன் மற்றும் அவரது மகன் பிரசாந்த் நடிக்கும் படத்தில் வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'கோர்ட்'. இந்த படம் ₹5 கோடி பட்ஜெட்டில் உருவாகி ₹57 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளதாகவும், இதில் வரும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் அவரே நடிக்க இருப்பதாகவும், அவரே இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவரது மகன் பிரசாந்த் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், இந்தப் படத்தின் நாயகன் தேர்வு இன்னும் முடிவாகவில்லை என்றாலும், நாயகியாக நடிக்க தேவயானி - ராஜகுமாரன் தம்பதியின் மகள்களில் ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.