Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரெய்னா இல்லாம பாதிக்கப்பட்டது பேட்டிங் இல்ல… இதுதான் – முன்னாள் வீரரின் செம்ம டிவீட்!

ரெய்னா இல்லாம பாதிக்கப்பட்டது பேட்டிங் இல்ல… இதுதான் – முன்னாள் வீரரின் செம்ம டிவீட்!
, செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (15:30 IST)
சி எஸ் கே அணியில் ரெய்னா இல்லாதது பீல்டிங்கில் பின்னடைவாக இருப்பதாக அமித் மிஸ்ரா கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய வீரர்களில் சிஎஸ்கே அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா முக்கியமானவர். ஒரு காலத்தில் சென்னை அணிக்கு தோனிக்குப் பிறகு கேப்டனாக ரெய்னாவே வருவார் என சொல்லப்பட்டது. அதனால் அவரை ரசிகர்கள் சின்ன தல என்றும் அன்போடு அழைத்து வந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான நிலைமை இல்லை. இதனால் அவரை இந்த ஆண்டு ஏலத்தில் சென்னை உள்பட எந்த அணியும் எடுக்கவில்லை.

அதையடுத்து இந்த ஆண்டு சி எஸ் கே அணி மிக மோசமாக தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கீழிருந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த தோல்விக்கு மிக முக்கியமானக் காரணம் மோசமான ஃபீல்டிங்கும்தான். ஷிவம் துபே, தோனி, ஜடேஜா உள்ளிட்ட பல வீரர்களும் மோசமாக பீல்ட் செய்து வருகின்றனர். இதையடுத்து அமித் மிஸ்ரா தன்னுடைய டிவீட்டில் “சென்னை அணி மற்ற எல்லாத்துறைகளை விடவும் பீல்டிங்கில்தான் இப்போது ரெய்னாவை மோசமாக மிஸ் செய்கிறது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாராணி தோற்றத்தில் மனதை கவரும் ரெபா ஜான் - ரீசன்ட் கிளிக்ஸ்!