Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் 2022-; சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

chennai -mumbai
, வியாழன், 21 ஏப்ரல் 2022 (19:17 IST)
15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் சிங்கிற்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் விளையாடுகிறது.

2022 ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றது. ஐபிஎல் போட்டி என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும்.

தற்போதைய சீசனில் இரண்டு அணிகளுமே தரவரிசை கடைசியில் உள்ளன. 6 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 1 போட்டியில் வென்றுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது.

இந்நிலையில் இன்று இந்த இரண்டு அணிகளுக்கிடையே நடைபெற உள்ள போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சென்னை அணியின் பந்து வீச்சாளர் ஆடம் மில்னே காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை என்று செய்திகள் வெளியானது.

தற்போது இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு வந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா டாஸ் வென்று, பவுலிங் தேர்வு செய்துள்ளார். எனவே   மும்பை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல்! – ரசிகர்கள் ஷாக்!