மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக்லைஃப் திரைப்படத்தில், த்ரிஷாவின் கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விவாதம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கமல்ஹாசனுக்கு ஜோடியாக த்ரிஷா முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், திடீரென கமல்ஹாசனின் இடத்தை சிம்பு பிடிக்கிறார்.
“இனி நான்தான் ரங்கராஜ சக்திவேல்,” என்று கூறும் அவர், த்ரிஷாவை பார்க்கும் பார்வையையே தான் ரசிக்க முடியவில்லை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
படத்தின் கதைப்படி, கமல்ஹாசனின் வளர்ப்பு மகன் சிம்பு. அப்படி இருக்கும்போது, திரிஷா சிம்புவுக்கு அம்மா முறை வேண்டும். ஆனால், அவர் பார்க்கும் பார்வையே வித்தியாசமாக உள்ளது.
இது "கலாச்சார சீரழிவு" என்று சொல்லலாம். அல்லது, மணிரத்னம் பாணியில் சொல்ல வேண்டுமானால், இது "கலாச்சார புரட்சி" என்றும் கூறலாம் என நெட்டிசன்கள் விமர்சனம் தெரிவிக்கின்றனர்.
நீங்கள் படம் பார்த்திருந்தால், உங்கள் கருத்தை கமெண்டில் கூறுங்கள்.