Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் 15 வருஷத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா? சின்மயி ஆத்திரம்..

நான் 15 வருஷத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா? சின்மயி ஆத்திரம்..
, சனி, 20 அக்டோபர் 2018 (10:45 IST)
கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய, பாடகி சின்மயிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது.  இது தொடர்பாக தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்து வருகிறது.

 
13 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இப்போது பேசுவதா? என்று சிலர் சின்மயியை கண்டித்து விமர்சித்து வருகிறார்கள்.
 
இந்த நிலையில் ஒருவர் டுவிட்டரில், “தீபாவளிக்கு சின்மயி வெடி என்று ஒன்று வந்துள்ளதாம். இப்போது பற்ற வைத்தால் பதினைந்து வருடத்துக்கு அப்புறம்தான் வெடிக்குமாம்” என்று கேலி செய்து ஒரு பதிவை வெளியிட்டார்.
 
இது சின்மயிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவருக்கு தனது டுவிட்டரில், “எரிமலை பல வருஷம் கொந்தளிச்சிட்டே இருக்குமாம். ஆனால் வெடிச்சா சர்வ நாசம். மூடிட்டு போ” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்டோ ஓட்டும் ரசிகையின் நெகிழவைக்கும் ஆசை! நிறைவேற்றுவாரா தல