Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல்ஹாசனிடம் ஏமாந்த சேரன்!

கமல்ஹாசனிடம் ஏமாந்த சேரன்!
, செவ்வாய், 1 அக்டோபர் 2019 (08:00 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியே வந்த இயக்குனர் சேரன் ’கமல்ஹாசன் நடிக்கும் ’தேவர் மகன் 2 படத்திற்கான கதை தன்னிடம் இருப்பதாகவும், கமலஹாசன் ஒப்புதல் அளித்தால் அந்த படத்தை தானே இயக்க தயாராக இருப்பதாகவும் நேற்று சென்னையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் 
 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக கலந்து கொண்டதால் வெளியில் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் அவர் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் ’தலைவன் இருக்கின்றான்’ என்ற ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை யும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
webdunia
இந்த நிலையில் ’தலைவன் இருக்கின்றான்’ என்ற படமே ’தேவர் மகன் 2’ படம் தான் என்பது கமல்ஹாசனின் வட்டாரங்கள் மட்டுமே அறிந்த உண்மை. தற்போது அரசியல் கட்சித் தலைவராகவும் கமல்ஹாசன் இருப்பதால் தேவர் மகன் என்ற  ஜாதி பெயரின் டைட்டில் வேண்டாம் என்று அவர் முடிவு செய்திருப்பதாகவும் மேலும் அந்த டைட்டிலை வைத்தால் சிக்கல் ஏற்படும் என்பதற்காக தான் அவர் ’தலைவன் இருக்கின்றான்’ என்ற டைட்டிலை வைத்து அவரே அந்த படத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளார்
 
 
இந்த விஷயம் தெரியாத சேரன், ’தேவர்மகன் 2’ படத்திற்கான கதை தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த உண்மை சேரனிடம் தெரிவிக்கப்பட்டதும் அவர் மிகுந்த தவறு ஏமாற்றம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தளபதி 64’ படத்தின் அடுக்கடுக்கான ஆச்சரியங்கள்