Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதியை நம்பி காத்திருந்த சேரன்… கடைசியாக எடுத்த முடிவு!

விஜய் சேதுபதியை நம்பி காத்திருந்த சேரன்… கடைசியாக எடுத்த முடிவு!
, சனி, 30 ஜனவரி 2021 (17:05 IST)
நீண்ட காலமாக விஜய் சேதுபதி நடிக்கும் படம் ஒன்றை இயக்க சேரன் ஆயத்தமாகி வருவதாக செய்திகள் சொல்லப்பட்டு வருகின்றன.

இயக்குனர் சேரன் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நேரத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு கதை சொன்னார். அந்த கதை பிடித்திருந்தாலும் அப்போது விஜய் சேதுபதி பிஸியாக இருந்ததால் சில மாதங்கள் கழித்து அந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால் அதற்குள் சேரனுக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்துகொண்டார். பின்னர் வெளியே வந்த போதும் அந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக சேரன் காத்திருந்த நிலையில் இப்போது ஒரு முடிவை எடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு படத்தை சிறிய பட்ஜெட்டில் இயக்க உள்ளாராம். இந்த படத்தை விஜய் சேதுபதிதான் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பரிந்துரை செய்து நடிக்க ஒப்புக்கொள்ள செய்தார் என்று சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென்று முடிவை மாற்றிய ஜகமே தந்திரம்… தட்டி தூக்கிய நெட்பிளிக்ஸ்!