Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் படத்தில் உதவி இயக்குனர் வேலை… போதும்டா சினிமா என கிளம்பிய சேரன்!

கமல் படத்தில் உதவி இயக்குனர் வேலை… போதும்டா சினிமா என கிளம்பிய சேரன்!
, செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (16:28 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சேரன் மகாநதி படத்தில் பணியாற்றிய அனுபவத்தைக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய தரமான படைப்புகளால் பிரபலமானவர் இயக்குனர் சேரன். பின்னர் அவர் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்தார். ஆனால் இப்போது இரண்டிலும் வாய்ப்புகள் இல்லாத நிலையில் தனது அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கமல் நடித்த மகாநதி படத்தில் பணியாற்றிய போது சினிமாவே வேண்டாம் என ஊருக்குக் கிளம்பியதாக தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலில் ‘மகாநதி படத்தின் இயக்குனர் சந்தானபாரதிதான். ஆனால் எல்லா வேலைகளையும் முடிவுகளையும் கமலே எடுப்பார். இதனால் நம்மால் எதுவுமே கற்றுக் கொள்ள முடியாது. ஒரு கட்டத்தில் கடுப்பாகி சினிமாவே வேண்டாம் என முடிவு செய்து ஊருக்கே கிளம்பிவிட்டேன்’ எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் சேரன் கே எஸ் ரவிக்குமாரிடம் உதவியாளராக சேர்ந்து நாட்டாமை உள்ளிட்ட படங்களில் வேலை செய்து இயக்குனரானார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் ரிலிஸாகும் விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள்!