Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனிமேல் ஓடிடிகளுக்கும் சென்ஸார்… மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

இனிமேல் ஓடிடிகளுக்கும் சென்ஸார்… மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!
, வியாழன், 12 நவம்பர் 2020 (20:29 IST)
இனி ஓடிடி தளங்களும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் கீழ் கொண்டுவரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
திரையரங்குகளில் வெளியிடப்படும் சினிமாக்களுக்கு உலகின் பெரும்பாலான நாடுகளில் தணிக்கை முறை உள்ளது. ஆனால் ஓடிடி எனப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் எந்தவொரு சென்ஸார் முறையும் இல்லை. இதன் மூலம் பாலியல் மற்றும் அதிக வன்முறை நிறைந்த காட்சிகள் அதிகம் இடம்பெறும் வகையில் திரைப்படங்கள் உருவாவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் மற்றொரு தரப்பினரோ ஓடிடி வயது வந்தவர்களுக்கானது; அதனால் தணிக்கை தேவையில்லை என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மத்திய அரசு அனைத்து ஓடிடி தளங்களும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஓளிபரப்பு துறையின் கீழ் கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளது. இதனால் இனி ஓடிடியில் ரிலிசாகும் படங்கள் மற்றும் சீரிஸ்களுக்கும் சென்சார் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய வெப் சீரிஸ்களில் சாதனைப் படைத்த மிர்சாபூர்… ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!