Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் அளித்த லஞ்ச புகார் எதிரொலி: 2 பெண்கள் உட்பட சென்சார் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (13:16 IST)
மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் மீது நடிகர் விஷால் அளித்த லஞ்ச புகார் தொடர்பாக, 2 பெண்கள் உட்பட 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

மார்க் ஆண்டனி திரைப்படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் தரகர்கள் மூலமாக லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் கடந்த சில நாட்களுக்கு முன் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார்.

இந்த புகாரின் மீது மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு லஞ்சம் பெற்றதாக கூறப்பட மும்பை சென்சார் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதையடுத்து விஷால் நன்றி தெரிவித்து இருந்தார்.

தனது புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி செய்த நிலையில் மத்திய அரசுக்கு நன்றி என்று கூறிய நடிகர் விஷால் ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை  எழுகிறது என்று கூறி இருந்தார். மேலும் ஊழலில் ஈடுபடாமல் நேர்மையாக நாட்டுக்கு சேவையாற்ற அதிகாரிகளை இது ஊக்குவிக்கும் என்றும்  ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் எனக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியான உணர்வை தருகிறது என்றும் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மத்திய அரசு கூறியபடியே  2 பெண்கள் உட்பட 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments