Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வி படத்தின் பார்ட் 2 எடுக்கும் தயாரிப்பாளர்… இந்த முறையாவது கைகொடுக்குமா?

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (08:44 IST)
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் சிவி குமார் தான் இயக்கிய மாயவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்திய அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்ளிட்ட படங்களை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வந்தவர் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் சி வி குமார். வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கிய அவர் இப்போது ஒரு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் படங்களை தயாரித்து வருகிறார்.

இப்போது அவர் தயாரிப்பில் 5 படங்களுக்கு மேல் உருவாகி வருகின்றன. இந்நிலையில் அவர் முதன் முதலாக இயக்குனராக அறிமுகமான மாயவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். அந்த படம் ரிலீஸின் போது பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments