Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 நாவல்களின் உரிமையைக் கைபற்றிய தயாரிப்பாளர் சி வி குமார்!

3 நாவல்களின் உரிமையைக் கைபற்றிய தயாரிப்பாளர் சி வி குமார்!
, வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:56 IST)
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் தயாரிப்பாளர் சி வி குமார் எழுத்தாளர் தமிழ்மகனின் 3 நாவல்களின் திரைப்பட உரிமையைக் கைப்பற்றியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்திய அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்ளிட்ட படங்களை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வந்தவர் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் சி வி குமார். வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கிய அவர் இப்போது ஒரு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் படங்களை தயாரித்து வருகிறார். இப்போது கொற்றவை என்ற படத்தை தயாரித்து இயக்கி வரும் அவர் எழுத்தாளர் தமிழ்மன் எழுதிய ‘ஆப்பரேஷன் நோவா’, நான் ரம்யாவாக இருக்கிறேன் மற்றும் வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் ஆகிய மூன்று நாவல்களின் உரிமையைப் பெற்றுள்ளார்.

இதனால் விரைவில் இந்த நாவல்கள் அவர் தயாரிப்பில் படமாகலாம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 65 பூஜையில் கலந்துகொண்ட பிக்பாஸ் பிரபலம்!