Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் கைதால் ஷாருக் கானின் விளம்பரங்களை நிறுத்திய முன்னணி நிறுவனம்!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (15:34 IST)
நடிகர் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கான் போதைப் பொருள் சம்மந்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பல் என்ற பெருமையுடன் எம்பிரஸ் தனது பயணத்தை தொடங்கியது. இந்த கப்பலில் போதை பார்ட்டி நடைபெற இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை இறங்கினர். 

சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் முடிவில் டை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 13 பேரில் பிரபல ஷாருக்கான் மகன் ஆர்யன் கானும் ஒருவன். 

இதனால் கடந்த சில தினங்களாக ஷாருக் கானின் பெயர் எதிர்மறையாக இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் ஷாருக் கான் நடித்த கல்வி சம்மந்தமான விளம்பரங்களை பைஜூஸ் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதை இப்போது நிறுத்தியுள்ளது. பைஜூஸின் இந்திய முகமாக ஷாருக் கான் அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்து.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments