Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணி மீது வருத்தத்தில் கொழுந்தன் நடிகர்

அண்ணி மீது வருத்தத்தில் கொழுந்தன் நடிகர்
, வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (16:24 IST)
தன்னைப் பிடிக்கும் என்று சொல்லாததால், அண்ணி மீது வருத்தத்தில் இருக்கிறாராம் கொழுந்தன் நடிகர்.



 
திருமணத்துக்குப் பிறகு ஒளி நடிகை நடித்த படம், கடந்த வாரம் ரிலீஸானது. அதன் புரமோஷனுக்காக சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக் பேஜில் ரசிகர்களுடன் லைவ் சாட் செய்தார் நடிகை. ஒருகாலத்தில் மிகப்பெரிய நடிகையாக இருந்தும், இப்போதுவரை நடிகைக்கு என தனியாக ஃபேஸ்புக் பேஜ் கூட இல்லை. எனவே, தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் பேஜில் லைவ் சாட் செய்தார்.

அந்த சாட்டில், ‘உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்?’ என்று ஒரு ரசிகர் கேட்டார். அதற்குப் பதிலளித்த நடிகை, ‘தன்னுடைய கணவருக்குப் பிறகு விஜய் சேதுபதி தான் பிடித்த நடிகர்’ என்று குறிப்பிட்டார். இதனால், கொழுந்தன் நடிகருக்கு அண்ணி மீது வருத்தமாம். பல விருதுகளை வென்ற படத்தில் அறிமுகமாகி, நிறைய படங்களில் நடித்த தன்னை அவர் குறிப்பிடவில்லை என்று மனைவியிடமும், அண்ணனிடமும் சொல்லி புலம்பி வருகிறாராம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெர்சல் டீசர் ; 1.5 லட்சம் பேருக்கு பிடிக்கவில்லை - படக்குழு அதிர்ச்சி