Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜோதிகாவுக்குப் பிடித்த நடிகர் யார்னு தெரியுமா?

ஜோதிகாவுக்குப் பிடித்த நடிகர் யார்னு தெரியுமா?
, வியாழன், 21 செப்டம்பர் 2017 (11:39 IST)
சூர்யாவுக்குப் பிறகு தனக்குப் பிடித்த நடிகர் இவர்தான் என ஜோதிகா தெரிவித்துள்ளார்.

 
 
‘மகளிர் மட்டும்’ கடந்த வாரம் ரிலீஸானதைத் தொடர்ந்து, நேற்று 2டி எண்டெர்டெயின்மெண்ட் ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ்  சாட் செய்தார் ஜோதிகா. அப்போது, பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். ‘சூர்யாவுக்குப் பிறகு உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?’ என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஜோதிகா, ‘விஜய் சேதுபதி’ என்று தெரிவித்தார். மணிரத்னம் இயக்கும் படத்தில்  இருவரும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மறுபடியும் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்ட ஜோதிகா, நல்ல கதை வந்தால் ஓகே என்றும் தெரிவித்துள்ளார். மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் கார்த்தி நடித்ததால், அவர் மூலமாகவே ஜோதிகாவிடம் பேசி ஒப்பந்தம் செய்துள்ளனர். ஜோதிகாவின் நடிப்பில் அடுத்ததாக ‘நாச்சியார்’ படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தை  பாலா இயக்கியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்கள்....