Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுன்னு வளர்ந்துட்டாங்களே பாபி சிம்ஹா குழந்தைகள்!

பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுன்னு வளர்ந்துட்டாங்களே பாபி சிம்ஹா குழந்தைகள்!
, வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (14:14 IST)
தமிழ் சினிமாவில் ஹீரோ - ஹீரோயினாக வலம் வந்த பல்வேறு ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களில் முக்கியமானவர்களான அஜித் - ஷாலினி,  சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா இப்பட்டி சொல்லிக்கொண்டே போகலாம் இந்த லிஸ்லிட்டில் நடிகர் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன்.

இவர்கள் இருவரும் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த ‘உறுமி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது காதலித்தனர்.  பின்னர் 2016 ஆம் ஆண்டு இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். பின்னர் ஒரு வருடம் கழித்து முத்ரா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

திருமணம் .. குழந்தை என குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியாக இருந்துவந்த ரேஷ்மி மேனன் சினிமாவில் இருந்து ஒரே அடியாக ஒதுங்கிவிட்டார். பாபி சிம்ஹா தொடர்ந்து படங்களில் வில்லன்.. ஹீரோ என எந்த ரோல் கிடைத்தாலும் அதில் தனது பங்கை சிறப்பாக செய்து வருகிறார். இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்தவகையில் இன்ஸ்டாவில் மகன் மற்றும் மகளின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர்களின் வளர்ச்சியை கண்டு ரசிகர்கள் வியப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் அண்ணாத்த ஷூட்டிங்… ரிலிஸ் டைமும் பிக்ஸ்!