Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தன்னுடைய காதல் குறித்து மனம் திறந்த ராஷ்மிகா - சிங்கிள் பசங்களுக்கு செம டிப்ஸ்!

தன்னுடைய காதல் குறித்து மனம் திறந்த ராஷ்மிகா - சிங்கிள் பசங்களுக்கு செம டிப்ஸ்!
, வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (08:53 IST)
"கிரிக் பார்ட்டி" என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் தேவரக்கொண்டாவுடன் அவர் சேர்ந்து நடித்த படங்களான டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்து தென்னிந்திய சினிமா உச்ச நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் நேரடியாக ஒரு படம் கூட இன்னும் நடிக்கவில்லை என்றாலும் ஏகப்பட்டட தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார். தற்போது நடிகர் கார்த்தியை வைத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இந்நிலையில் திரைத்துறையில் தன்னை பற்றி வரும் காதல் கிசு கிசுக்கள் குறித்து கருத்து தெரிவித்த ராஷ்மிகா, "இதுவரை என்னுடன் நடித்த, எனக்கு தெரிந்த அனைவருடன் சேர்த்து வச்சு காதல் கிளப்பி விட்டுட்டாங்க. ஆனால், அதெல்லாம் சுத்த பொய் நான் ஒரு சிங்கிள் பெண். இப்படி இருக்குறது ரொம்ப பிடிச்சிருக்கு ஜாலியா இருக்குறேன். ஆனால், சிங்கிள்ஸ் நிறைய புலம்புறாங்க.... நீங்க எல்லாரும் ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க சிங்கிளாக இருப்பதை ரசிக்கத் துவங்கினால் உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மா பாட்டுக்கு சிரிப்பிலே மெட்டு போடும் ஐலா பாப்பா - ட்ரெண்டிங் வீடியோ!