Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாத்தி மாத்தி பேசி மாட்டிக்கொண்ட பாவினி - துருவி எடுத்த ஆண்டவர்!

மாத்தி மாத்தி பேசி மாட்டிக்கொண்ட பாவினி - துருவி எடுத்த ஆண்டவர்!
, சனி, 30 அக்டோபர் 2021 (17:26 IST)
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வார இறுதி நாள் என்றாலே ஸ்வாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. அதுவும் கடந்த வாரம் முழுக்க வீட்டில் நாணயம் திருட்டு விவகாரத்தில் செம ரகளை நடந்துள்ளது. தாமரை ஸ்ருதி உடுத்தும் உடை வரை விமர்த்தித்து பேசியிருந்தார்.
 
அதையெல்லாம் ஆண்டவர் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்க வந்துள்ளார். முதல் ப்ரோமோ வீடியோவில், பிக்பாஸ் ரூல்ஸ் குறித்து பேசி சண்டையிட்ட தாமரை ஸ்ருதி விவகாரத்தை குறித்து தான் கமல் பேசுகிறார். சனிக்கிழமை வரட்டும் நான் அவர் கிட்டயே பேசிக்குறேன் என தாமரை மற்றும் தலைவி இசைவாணி உள்ளிட்டரோ கூறியிருந்தனர். 
 
அவர்களுடன் பேசுவதற்கு தான் தயாராகி வந்திருப்பதாக கமல் இந்த முதல் ப்ரோமோவில் கூறியுள்ளார். இரண்டாவதாக வெளியான ப்ரோமோவில், பாவினி, ஸ்ருதி தாமரை காயினை திருட உதவி செய்த நீ தட்டி கேட்பவர்களிடம் நாங்க திட்டமே போடவில்லை என கூறினாய். 
 
ஆனால், நீங்கள் இருவரும் நான் இதை செய்யப்போகிறேன், இப்படி செய்யப்போகிறேன், அப்போ நீ எடுத்துக்கோ என்று பேசிய அனைத்தையும் நாங்கள் பார்த்தோம் என கூறி பாவினியை கண்டித்தார். அப்படியும் திருந்தாத பாவினி ஆண்டவரிடம் தான் செய்த தவறை மறைக்க திரும்ப திரும்ப பேசி மழுப்பி வசமா மாட்டிக்கொண்டார். இப்போ தாமரை மனசு குளுகுளுன்னு இருந்திருக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'எனிமி'யைப் புகழ்ந்து தள்ளிய விஷால்